திருச்சிராப்பள்ளி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் தொண்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
௨00௮ ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வு நூலாக கபிலன் பதிப்பகத்தின் வெளியீடான, முனைவர் சேதுபதி எழுதிய சொற்பொழிவாளர் பாரதியார் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆசிரியருக்கும் பதிப்பகத்தாருக்கும் இப்பெரு மக்கள் பெரு மதிப்பும் அன்பும் அளித்துப் போற்றுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக அண்ணாச்சி என எல்லாராலும் அன்போடு அழைக்கப் படுகிற மூத்த எழுத்தாளர் திரு. பொன்னீலன் அவர்களின் அன்பு பெரு விருது.
குழந்தை உள்ளதோடு எல்லோரையும் தாவி அணைக்கிற அவரைப் பார்க்கிறபோது உள்ளத்தில் மட்டில்லா மகிழ்ச்சி பொங்கும்.
செந்தீ நடராஜன் உள்ளிட்ட அன்பர்கள் யாவரும் போற்றுதற்குரியவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக