Kapilan Release

ஞாயிறு, 31 மே, 2009



திருநெடுந் தாண்டகத்தில் அகப்பொருள் நூல் வெளியீட்டு விழா
புதுவை கம்பன் கழகச் சான்றோர் பெருமக்கள்
Posted by Picasa

யாவினும் புண்ணியம்



இன்னரும்கனிச்சோலைகள்செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்னசத்திரம்ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதினாயிரம்நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும்புண்ணியம்கோடி
ஆங்கோர்ஏழைக்குஎழுத்துஅறிவித்தல்
- பாரதியார்
Posted by Picasa

சனி, 30 மே, 2009

வரவேற்கிறோம்!



கபிலன் பதிப்பகம்
தங்களை அன்போடு வரவேற்கிறது!


Posted by Picasa

ஜீவா நூற்றாண்டு விழா - ஜெயகாந்தன் பேட்டிகள் நூல் வெளியீடு


ஜீவா நூற்றாண்டு


ஜீவா நூற்றாண்டு விழா - சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தொடரும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ஜீவா நூற்றாண்டு விழாவில் ஜெயகாந்தன் பேட்டிகள் நூல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் வெளியிட, திருச்சிராப்பள்ளி உருமு தனலட்சுமி கல்லூரித் தாளாளர் மோதி இராஜகோபாலன் அவர்கள்

ஜீவா நூற்றாண்டு விழா புத்தகக் காட்சி


ஜீவா நூற்றாண்டு விழா புத்தகக் காட்சியிலிருந்து...

புத்தகக் காட்சி



புத்தகக் காட்சி

ஜீவா நூற்றாண்டு விழா



ஜெயகாந்தன் பேட்டிகள் நூலை ஜெயகாந்தன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜீவா நூற்றாண்டு விழாவில் வாசகர்கள் கபிலன் பதிப்பக நூல்களை விருப்பமுடன் வாங்கிச் சென்றனர். விழாவில் உள்ளூர் அன்பர்கள் உள்ளிட்ட பல அறிஞர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

யாமும் பாரியும் உளமே;



கடந்து ஆடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே!

அளிதோ தானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே
வான் கண் அற்று, அதன் மலையே வானத்து
மீன் கண் அற்று அதன் சுனையே; ஆங்கு
மரந்தோறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளில் கொள்ளலிர் வாளில் தாரலன்
யானறி குவென் அது கொள்ளும் ஆறே;
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தல் நும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே!

பறம்பு பாடினர்

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு
பாரியும், பரிசிலர் இரப்பின்,
'வாரேன்' என்னான், அவன்வரை அன்னே!

நெடியோன் குன்றே!


ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறுவரைசென்று நின்றோர்க்கும் தோன்றும்; மன்றகளிறு மென்று இட்ட கவளம் போலநறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்வார் அசும்பு ஒழுகு முன்றில்தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே!




கபிலர்

பொருட்குறள்


பொருட்குறள்

பொருட்குறள்


பொருட்குறள் 

வெள்ளி, 29 மே, 2009

தமிழ் இலக்கண உணர்வுகள்

தமிழ் இலக்கண உணர்வுகள்

ஆ. சிவலிங்கனார் இலக்கணச் செம்மல் எனப் போற்றப்படுபவர் ஆவார். தமிழின் தொல்காப்பிய முப்பெரும் இலக்கணங்களான எழுத்து, சொல். பொருள் ஆகிய மூன்றிற்கும் பல்வேறு அரிய இலக்கண நூல்களின் விளக்கங்களோடு உரை வரைந்திருக்கிறார்.

தமிழ் இலக்கணத்தை அறிவுப் பூர்வமாக மட்டும் அல்லாது உணர்வுக்குரிய பொருளாக்கிப் படைத்திருக்கிறார்.

தமிழ் இலக்கணத்தைத் தெளியக் கற்பதற்கு இது நல்லொதொரு வழிகாட்டி நூலாகும்.



கபிலன் முகப்பு


கபிலன் வெளியீடுகள்
மானுடம் பேணிய தமிழ் - ஜோசப் சகாயராஜ்
சீதாயணம் - சேதுபதி
பாரிவேட்டை - சேதுபதி
தமிழ் இலக்கண உணர்வுகள் - ஆ. சிவலிங்கனார்
உதய நகரிலிருந்து - இரா. மீனாட்சி (தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புதுக்கவிதை நூல் விருது)
(புதுவை கல்லாடனார் அறக்கட்டளை விருது)
(திருப்பூர் தமிழ் சங்க விருது )
ஜெயகாந்தன் பேட்டிகள்
சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் - சேதுபதி
பைந்தமிழ்க் காவலர் பழ. முத்தப்பனார் - சேதுபதி
பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி (படங்களுடன்)
பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு - மரு. பரமகுரு (திருப்பூர் தமிழ் சங்க விருது)
மனச் சுவடுகள் - மரு. பரமகுரு
இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவப் புதினங்களில் ஒடுக்கப்பட்டோர் - உ.இராசு
சொற்பொழிவாளர் பாரதியார் - சேதுபதி (என்.சி.பி.எச். கலை இலக்கியப் பெருமன்ற விருது)
அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர் - இரா. மீனாட்சி, சேதுபதி
அற்புதத் துறவி அடிகளார் - சேதுபதி
சகாதேவர் அருளிய தொடுகுறி சாஸ்திரம்
குறளறம் - அ.சொ.சண்முகனார்
பொருட்குறள் - அ.சொ.சண்முகனார்
இன்பக்குறள் - அ.சொ.சண்முகனார்
உயிரின் நிறங்கள் - அ.சொ.சண்முகனார்
திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள் - பா. சுந்தர்
மார்கழிப் பாவை - கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
மார்கழிப் பூக்கள் - மரு. பரமகுரு
பரமகுரு பாடுகிறேன் - மரு. பரமகுரு


சிறந்த நூல்களுக்கான விருது



திருச்சிராப்பள்ளி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் தொண்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
௨00௮ ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வு நூலாக கபிலன் பதிப்பகத்தின் வெளியீடான, முனைவர் சேதுபதி எழுதிய சொற்பொழிவாளர் பாரதியார் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆசிரியருக்கும் பதிப்பகத்தாருக்கும் இப்பெரு மக்கள் பெரு மதிப்பும் அன்பும் அளித்துப் போற்றுகிறார்கள்.




அதிலும் குறிப்பாக அண்ணாச்சி என எல்லாராலும் அன்போடு அழைக்கப் படுகிற மூத்த எழுத்தாளர் திரு. பொன்னீலன் அவர்களின் அன்பு பெரு விருது.

குழந்தை உள்ளதோடு எல்லோரையும் தாவி அணைக்கிற அவரைப் பார்க்கிறபோது உள்ளத்தில் மட்டில்லா மகிழ்ச்சி பொங்கும்.

செந்தீ நடராஜன் உள்ளிட்ட அன்பர்கள் யாவரும் போற்றுதற்குரியவர்கள்.
Posted by Picasa

அற்புதத் துறவி அடிகளார் நூல் வெளியீடு



அற்புதத் துறவி அடிகளார் நூல் வெளியீடு ௨00௮ ஆம் ஆண்டு
குன்றக்குடித் திருமடக் குருபூசை விழாவில்
தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களால் வெளியிடப் பெற்றது.
உடன் நீதியரசர் இராம சுப்பிரமணியம் உள்ளிட்ட திருமடத்து அன்பர்களும், நூலாசிரியரும்
Posted by Picasa

அற்புதத் துறவி அடிகளார்



அற்புதத் துறவி அடிகளார்
Posted by Picasa

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்......



கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்......

சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு சாகித்ய அகாடமி விருது



Sirpi Balasubramaniam2002ம் ஆண்டின் சிறந்த படைப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற கவிஞர்சிற்பி பாலசுப்பிரமணியம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

'ஒரு கிராமத்து நதி' என்ற அவரது கவிதை நூலுக்காக இந்த விருது தரப்படுகிறது. இவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு சிறந்தமொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை சிறந்த படைப்புக்கான விருதை வென்றுள்ளார். வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் இந்த விருதுவழங்கப்படும். ரூ. 25,000 பணமும் பாராட்டுப் பட்டயமும் இந்த விருதுடன் தரப்படும்.

வானம்பாடி என்ற தமிழ் கவிதை இயக்கத்தை முன்னின்று நடத்தி வரும் சிற்பி பாலசுப்பிரமணியம் இதுவரை 10 கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தனது மெளன மயக்கங்கள், பூஜ்யங்களின் சங்கிலி ஆகிய படைப்புகளுக்காக தமிழக அரசின்பாவேந்தர் விருதுகளை வென்றார்.

பல மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் பல மாணவர்களால் பி.எச்டிஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவரது வழிகாட்டுதலின் கீழ் 15 மாணவர்கள் டாக்டர் பட்டங்களையும்வென்றுள்ளனர்.

தனது 66 வயதிலும் தீராத தமிழ் தாகமும் படைப்பாற்றலும் கொண்டு உழைத்து வருபவர் சிற்பி பாலசுப்பிரமணியம்.

நன்றி தட்ஸ் தமிழ்

Posted by Picasa

திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள்



திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள்
Posted by Picasa
திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள்


ஆரோவில் தமிழ் மரபு மையத்தின் அன்பான வழிகாட்டுதலின் பேரில், புதுவை கபிலன் பதிப்பகமும் ௨00௬ ஆம்ஆண்டிலிருந்து ஆரோவில்லைச் சுற்றிலும் உள்ள கிராமத்துத் தமிழ்க் குழந்தைகளின் நூல் வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கும் விதமாக தமிழக முன்னணிப் பதிப்பகங்களின் நூல்களைத் தேர்வு செய்து காட்சிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஅன்னையின் கனவு பூமியாகவும் உலகின் ஒரூராகவும் விளங்கும்ஆரோவில்லில் நான்கு மொழிகள் சிறப்பிடம் பெறுகின்றன. இந்த நான்குமொழிகளிலும் உள்ள புதிய நூல்கள் அனைத்தையும் கொணர்ந்துகுழந்தைகளுக்குக் காட்சிப் படுத்துவதிலும் அவர்களுக்குப்
புத்தகங்களைத் தருவதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

சேதுபதியின் சிறந்த படைப்புகள்



சேதுபதியின் சிறந்த படைப்புகள்

MADURAI: It was more than a film audio release function. For once, the Madurai Medical College grounds here turned into a literary platform where experts in their respective disciplines recited their verses.

The audio release function of the Tamil film, `Ajanta,' on Tuesday night, also saw the launch of the Ilayaraja Literary Association. Novelist D. Jayakanthan is the president of the association.

"It was inaugurated in memory of Pavalar Varadharajan and awards have been instituted in his name. Tamil scholars and promising writers will be honoured with cash prizes," Mr. Ilayaraja said.

Participating in the function, director Bharathiraja showered encomiums on his childhood friend and said that Ilayaraja did not confine himself to music, but transcended to the world of literature. "He knows the value of struggle and his thirst for knowledge is unquenchable," he said.

Four litterateurs were honoured on the occasion. `Pavalar Varadharajan Perarignar' awards were conferred on P. Namasivayam, a retired Tamil professor, and C. Kalyanasundaram popularly known as `Vannadasan,' for their meritorious service in the field of Tamil literature. The award carries a plaque and a cash prize of Rs.2 lakh.

`Pavalar Varadharajan Padaipilayakkiyam' (creative writing) awards were conferred on film lyricist Pazhani Bharathi and a Tamil professor S. Sethupathi, for relentless work in their respective fields. The award carries a plaque and a cash prize of Rs.50,000.

Drama artistes and musicians were also felicitated on the occasion.

Mr. Ilayaraja informed that the association would produce a documentary on the life of its president D. Jayakanthan.

Nostalgic memories engulfed Mr. Ilayaraja as he reminisced the days spent by him and Bharathiraja on the streets of Madurai. He was also very responsive to the crowd's request when he sang his popular number `Janani... Janani... ' from the film `Thai Mookambigai'.

`Angingu' orchestra performed the songs of the movie `Ajanta'. At the end, the audience had the satisfaction of seeing scholars being honoured at the seat of Tamil learning, for it would enliven young minds and inspire them into learning Tamil language with passion.

Posted by Picasa

மனச்சுவடுகள்



மனச்சுவடுகள்
Posted by Picasa

வியாழன், 28 மே, 2009

குறளறம்




குறளறம்
Posted by Picasa

ஜெயகாந்தன் யுகம்


ஜெயகாந்தன் (பிறப்பு: ஏப்ரல் 24, 1934) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது.

வாழ்க்கைக் குறிப்பு

ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லாமையால், தனது ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். வீட்டில் இவர் நடத்தப் பட்ட விதம் பிடிக்காமல், வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார்.அங்கு, அவரது மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர், ஜெயகாந்தனை கம்யூனிச வேதாந்தத்திற்க்கும், பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப் படுத்தினார்.

ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்கு குடிப்பெயர்ந்தார். அங்கு பெரும்பாளான நேரத்தை சி.பி.ஐ -யின் ஜனசக்தி அலுவலகத்தில் - அச்சகத்தில் பணிப்புரிந்தும், ஜனசக்தி பத்திரிக்கைகள் விற்றும் களித்தார். ஆனால் 1949-ஆம் ஆண்டு சி.பி.ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை விதிக்கப் பட்டது.ஆதலால், அவர் சில மாதங்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிப் புரிந்தார். இந்த எதிர்ப்பாராத இடைவேளை, அவர் வாழ்க்கையில் முக்கிய கால கட்டமாக அமைந்தது - அவர் சிந்திக்கவும் எழுதவும் நேரம் கிடைத்தது.இக்கால கட்டத்தில், தமிழ் நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன.தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார்.பின்னர் காமராசருடைய தீவிர தொண்டனாக மாறி, தமிழக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் துவங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாயின. இவரது படைப்புகளுக்கு புகழும் அங்கிகாரமும் கிடைத்தது. இருபதாம் நூற்றாண்டின் தலைச் சிறந்த தமிழ் எழுதாளர்களில் ஒருவராகப் போற்றப் பட்டார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" படமாக்கப் பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ஜனாதிபதி விருதில் மூன்றாம் பரிசைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற நாவலாக உரு பெற்றது.

[தொகு] படைப்புகள் [தொகு] தன் வரலாறு

* ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )
* ஒர் இலக்கியவாதியின் கலையுலகஅனுபவங்கள் (செப்டம்பர் 1980 )

[தொகு] வாழ்க்கை வரலாறு

* வாழவைக்க வந்த காந்தி 1973 (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )
* ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)

[தொகு] நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்

* வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
* கைவிலங்கு (ஜனவரி 1961)
* யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
* பிரம்ம உபதேசம் (மே 1963)
* பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
* கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )
* பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
* கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)
* சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
* ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)
* ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
* ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)
* கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
* ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)
* பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
* எங்கெங்கு காணினும்... (மே 1979)
* ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
* கரிக்கோடுகள் (ஜூலை 1979)
* மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
* ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)
* ஒவ்வொரு கூரைக்கும் கீழே...(ஜனவரி 1980)
* பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)
* அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
* இந்த நேரத்தில் இவள்... (1980)
* காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
* காரு (ஏப்ரல் 1981)
* ஆயுத பூசை (மார்ச் 1982)
* சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)
* ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
* ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)
* இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
* இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)
* காற்று வெளியினிலே...(ஏப்ரல் 1984)
* கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)
* அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர் 1985)
* இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)
* ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
* சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
* உன்னைப் போல் ஒருவன்
* ஹர ஹர சங்கர (2005)

[தொகு] சிறுகதைகள்

* ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
* இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)
* தேவன் வருவாரா (1961)
* மாலை மயக்கம் (ஜனவரி 1962)
* யுகசந்தி (அக்டோபர் 1963)
* உண்மை சுடும் (செப்டம்பர் 1964)
* புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
* சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
* இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
* குருபீடம் (அக்டோபர் 1971)
* சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)
* புகை நடுவினிலே... (டிசம்பர் 1990)
* சுமைதாங்கி
* பொம்மை

[தொகு] கட்டுரை

* பாரதி பாடம்
* இமயத்துக்கு அப்பால்

[தொகு] திரைப்படமாக்கப்பட்ட இவர் கதைகள்

* சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங்)
* ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங்)
* ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் : லெனின்)
* உன்னைப் போல் ஒருவன்
* யாருக்காக அழுதான்
* புதுச் செருப்பு

[தொகு] ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படம்

* உன்னைப் போல் ஒருவன்
* யாருக்காக அழுதான் [1]

[தொகு] சிந்தனை சிதறல்கள்
[தொகு] ஜெயகாந்தன் பேட்டிகள்



* "முதலில் எழுதுகிறவன் என்ற முறையில், எதை எழுதுவது என்று தீர்மானிப்பவன் நானே"

* "ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்ளுகின்ற வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையினை புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்"

* "மகாபாரதம் என்பது ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் எனக்கு சொல்லவில்லை. மேலும் அது மகாபாரதம் என்ற கலாசாரப் பொக்கிஷத்தில் ஒரு விஷயமாகவோ, சிபாரிசாகவோ எனக்குப் படவேயில்லை. அந்த விஷயத்தைப் புரிந்துகொள்கிற பக்குவம், திரௌபதி அம்மன் கோவிலின் முன்னால் சாமியாடுகிற ஒரு பாமரனுக்கு இருக்கிற அளவுக்குக் கூட நமது பகுத்தறிவுச் சிங்கங்களுக்கு இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டமே"

* "அரசாங்க அலுவலகங்களில் மகான்களின் மரணத்துக்காக கொடிகள் தாழப்பறக்கட்டும். அவர்கள் நினைவாகப் பிரார்த்தனைகள் நடக்கட்டும். ஆனால், எது குறித்தும் எல்லாரும் கும்பல் கூடி அழவேண்டா. ரேடியோக்காரர்கள் தங்களது பொய்த்துயரத்தை காற்றில் கலப்படம் செய்யாதிருக்கட்டும்"

* "நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்... மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது....ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்... "


[தொகு] விருதுகள்

  • * சாகித்ய அகாதெமி விருது
  • * 2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது
  • * 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது
[தொகு] மற்ற எழுத்தாளர்களின் கருத்துக்கள்

* "ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கி பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்"

- அசோகமித்ரன்

*
"மனதைக் கிள்ளி மோகலாகிரியைத் தூவும் சொற்கள் பல தமிழில் உண்டு. ‘ஜெயகாந்தன்என்ற பெயரே அப்படிப்பட்டதுதான். இந்தப் பெயர் அறிமுகமாகி என்னளவில் நாற்பத்தைந்து வருடங்களாவது இருக்கும். ஆனாலும், இந்தப் பெயர் தரும் கவர்ச்சியும், அதன் மீதான பிரேமையும் அப்படியே இருக்கின்றன. யதார்த்தத்தின் மற்றொரு பெயர்தத்ரூபம்என்றால், ஜெயகாந்தனின் கதைகள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக இருந்தன. ஜெயகாந்தன் என்ற மேதாவிலாசமிக்க படைப்பாளியின் ஊற்றுக்கண் எங்கே இருந்து புறப்படுகிறது என்று அனுமானிப்பது கடினம். நதிமூலம், ரிஷிமூலம் தேடுகிற மாதிரியான சமாச்சாரம்தான் இது. என்றாலும், ஜெயகாந்தனே தன்னைப் புதுமைப்பித்தனின் வாரிசு என்பதுபோல் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. இதுதான் நிஜமும். "

- வண்ணநிலவன்

* " பாரதியார் வாழ்ந்த காலங்களில் கௌரவிக்கப்பட்டதில்லை. லியோ டால்ஸ்டாய் நோபல் பெறாதவர். போர்ஹே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். விருதும் கௌரவமும் சரியான நேரத்தில், சரியான நபருக்கு, சரியான அமைப்புகளால் வழங்கப்பÊடுவது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்காக விருதுகளால் மட்டுமே எழுத்தாளர்கள் கௌரவம் அடைவதுமில்லை. ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளைத் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும், தனித்துவமும் கொண்டவர்."

- எஸ்.ராமகிருஷ்ணன்

*

நன்றி: விக்கிபீடியா

குளிர் சாரற்கொடுங் குன்றம்

'Posted

வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே!

மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே!

மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே!

பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த
பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே!

மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே!

- திருஞானசம்பந்தர்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv vvvvvvv


கபிலன் வெளியீடுகள்
மானுடம் பேணிய தமிழ் - ஜோசப் சகாயராஜ்
சீதாயணம் - சேதுபதி
பாரிவேட்டை - சேதுபதி
தமிழ் இலக்கண உணர்வுகள் - ஆ. சிவலிங்கனார்
உதய நகரிலிருந்து - இரா. மீனாட்சி (தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புதுக்கவிதை நூல் விருது)
(புதுவை கல்லாடனார் அறக்கட்டளை விருது)
(திருப்பூர் தமிழ் சங்க விருது )
ஜெயகாந்தன் பேட்டிகள்
சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் - சேதுபதி
பைந்தமிழ்க் காவலர் பழ. முத்தப்பனார் - சேதுபதி
பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி (படங்களுடன்)
பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு - மரு. பரமகுரு (திருப்பூர் தமிழ் சங்க விருது)
மனச் சுவடுகள் - மரு. பரமகுரு
இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவப் புதினங்களில் ஒடுக்கப்பட்டோர் - உ.இராசு
சொற்பொழிவாளர் பாரதியார் - சேதுபதி
(என்.சி.பி.எச். கலை இலக்கியப் பெருமன்ற விருது)
அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர் - இரா. மீனாட்சி, சேதுபதி
அற்புதத் துறவி அடிகளார் - சேதுபதி
சகாதேவர் அருளிய தொடுகுறி சாஸ்திரம்
குறளறம் - அ.சொ.சண்முகனார்
பொருட்குறள் - அ.சொ.சண்முகனார்
இன்பக்குறள் - அ.சொ.சண்முகனார்
உயிரின் நிறங்கள் - அ.சொ.சண்முகனார்
திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள் - பா. சுந்தர்
மார்கழிப் பாவை - கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
மார்கழிப் பூக்கள் - மரு. பரமகுரு
பரமகுரு பாடுகிறேன் - மரு. பரமகுரு