Kapilan Release

செவ்வாய், 12 மே, 2009

எமது பதிப்பகத்தில்.....

கபிலன் பதிப்பகம் தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது.
உலகின் தலை சிறந்த மொழி எனப் போற்றப்படும் அமுதனைய
தமிழ் மொழியின் இலக்கிய மாமேதைகள் பலருடைய நூல்களைக் கபிலன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது பெருமைக்குரியது.


இலக்கணச் செம்மல் ஆ. சிவலிங்கனார்
ஞான பீடம் ஜெயகாந்தன்
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்
கவிஞர் இரா. மீனாட்சி
கவிஞர் மரு. பரமகுரு
முதலிய தலை சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் நூல்களும்

முனைவர் ஜோசப் சகாயராஜ்
முனைவர் உ. இராசு
முனைவர் பா. சுந்தர்
முதலிய தமிழ் ஆய்வாளர்களின் நூல்களும்

இளையராஜா இலக்கிய விருது
ஸ்டாட் பேங்க் விருது மற்றும் பல விருதுகளைப் பெற்றும்
தமிழகத்தின் வளரும் இளம் தலைமுறைப் பேச்சாளராகத் திகழும்
முனைவர் சேதுபதி அவர்களின்
கவிதை
ஆய்வுக் கட்டுரைகள்
சிறுகதை
முதலான நூல்களும் எமது பதிப்பகத்தின் வழி வெளியிடப்பட்டுள்ளன.

இலக்கிய நயம் மிகுந்த, வரலாற்றில் இடம் பெறும் பதிவுகளால் நூல்கள் வெளியாகின்றன.
விரைவில், பல புதிய தலைப்பிலான நூல்கள் வெளிவரவுள்ளன.




ஆரோவில் கலாகேந்திராவில் ஆண்டுதோறும் நடைபெறும் குழந்தைகள் புத்தககக் கண்காட்சியைக் காணுவதற்கு ஆயிரக் கணக்கில் குழந்தைகள் வருவார்கள். புத்தகங்கள் மட்டுமல்லாது கலைச் சிற்பங்கள், ஓவியங்கள், நடனம், பாட்டு என்று ஆடிப் பாடி மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். அதைக் காணக் கண் கோடி வேண்டும். செவிக்குணவில்லாத சிறிது நேரத்தில் வயிற்றுக்கும் உணவு வழங்கப்படும். கடலை, சுண்டல், தேங்காய் சாதம், பழங்கள். பழச்சாறுகள் இப்படி ஏதாவது ஓன்று எப்போதும் வந்து கொண்டே இருக்கும்.
நீங்களும் இந்த ஆண்டு வருகிறீர்களா!

குளிர் சாரற்கொடுங் குன்றம்

'Posted

வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே!

மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே!

மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே!

பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த
பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே!

மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே!

- திருஞானசம்பந்தர்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv vvvvvvv


கபிலன் வெளியீடுகள்
மானுடம் பேணிய தமிழ் - ஜோசப் சகாயராஜ்
சீதாயணம் - சேதுபதி
பாரிவேட்டை - சேதுபதி
தமிழ் இலக்கண உணர்வுகள் - ஆ. சிவலிங்கனார்
உதய நகரிலிருந்து - இரா. மீனாட்சி (தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புதுக்கவிதை நூல் விருது)
(புதுவை கல்லாடனார் அறக்கட்டளை விருது)
(திருப்பூர் தமிழ் சங்க விருது )
ஜெயகாந்தன் பேட்டிகள்
சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் - சேதுபதி
பைந்தமிழ்க் காவலர் பழ. முத்தப்பனார் - சேதுபதி
பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி (படங்களுடன்)
பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு - மரு. பரமகுரு (திருப்பூர் தமிழ் சங்க விருது)
மனச் சுவடுகள் - மரு. பரமகுரு
இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவப் புதினங்களில் ஒடுக்கப்பட்டோர் - உ.இராசு
சொற்பொழிவாளர் பாரதியார் - சேதுபதி
(என்.சி.பி.எச். கலை இலக்கியப் பெருமன்ற விருது)
அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர் - இரா. மீனாட்சி, சேதுபதி
அற்புதத் துறவி அடிகளார் - சேதுபதி
சகாதேவர் அருளிய தொடுகுறி சாஸ்திரம்
குறளறம் - அ.சொ.சண்முகனார்
பொருட்குறள் - அ.சொ.சண்முகனார்
இன்பக்குறள் - அ.சொ.சண்முகனார்
உயிரின் நிறங்கள் - அ.சொ.சண்முகனார்
திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள் - பா. சுந்தர்
மார்கழிப் பாவை - கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
மார்கழிப் பூக்கள் - மரு. பரமகுரு
பரமகுரு பாடுகிறேன் - மரு. பரமகுரு