Kapilan Release

சனி, 30 மே, 2009

வரவேற்கிறோம்!



கபிலன் பதிப்பகம்
தங்களை அன்போடு வரவேற்கிறது!


Posted by Picasa

ஜீவா நூற்றாண்டு விழா - ஜெயகாந்தன் பேட்டிகள் நூல் வெளியீடு


ஜீவா நூற்றாண்டு


ஜீவா நூற்றாண்டு விழா - சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தொடரும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ஜீவா நூற்றாண்டு விழாவில் ஜெயகாந்தன் பேட்டிகள் நூல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் வெளியிட, திருச்சிராப்பள்ளி உருமு தனலட்சுமி கல்லூரித் தாளாளர் மோதி இராஜகோபாலன் அவர்கள்

ஜீவா நூற்றாண்டு விழா புத்தகக் காட்சி


ஜீவா நூற்றாண்டு விழா புத்தகக் காட்சியிலிருந்து...

புத்தகக் காட்சி



புத்தகக் காட்சி

ஜீவா நூற்றாண்டு விழா



ஜெயகாந்தன் பேட்டிகள் நூலை ஜெயகாந்தன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜீவா நூற்றாண்டு விழாவில் வாசகர்கள் கபிலன் பதிப்பக நூல்களை விருப்பமுடன் வாங்கிச் சென்றனர். விழாவில் உள்ளூர் அன்பர்கள் உள்ளிட்ட பல அறிஞர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

யாமும் பாரியும் உளமே;



கடந்து ஆடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே!

அளிதோ தானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே
வான் கண் அற்று, அதன் மலையே வானத்து
மீன் கண் அற்று அதன் சுனையே; ஆங்கு
மரந்தோறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளில் கொள்ளலிர் வாளில் தாரலன்
யானறி குவென் அது கொள்ளும் ஆறே;
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தல் நும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே!

பறம்பு பாடினர்

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு
பாரியும், பரிசிலர் இரப்பின்,
'வாரேன்' என்னான், அவன்வரை அன்னே!

நெடியோன் குன்றே!


ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறுவரைசென்று நின்றோர்க்கும் தோன்றும்; மன்றகளிறு மென்று இட்ட கவளம் போலநறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்வார் அசும்பு ஒழுகு முன்றில்தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே!




கபிலர்

பொருட்குறள்


பொருட்குறள்

பொருட்குறள்


பொருட்குறள் 

குளிர் சாரற்கொடுங் குன்றம்

'Posted

வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே!

மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே!

மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே!

பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த
பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே!

மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே!

- திருஞானசம்பந்தர்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv vvvvvvv


கபிலன் வெளியீடுகள்
மானுடம் பேணிய தமிழ் - ஜோசப் சகாயராஜ்
சீதாயணம் - சேதுபதி
பாரிவேட்டை - சேதுபதி
தமிழ் இலக்கண உணர்வுகள் - ஆ. சிவலிங்கனார்
உதய நகரிலிருந்து - இரா. மீனாட்சி (தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புதுக்கவிதை நூல் விருது)
(புதுவை கல்லாடனார் அறக்கட்டளை விருது)
(திருப்பூர் தமிழ் சங்க விருது )
ஜெயகாந்தன் பேட்டிகள்
சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் - சேதுபதி
பைந்தமிழ்க் காவலர் பழ. முத்தப்பனார் - சேதுபதி
பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி (படங்களுடன்)
பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு - மரு. பரமகுரு (திருப்பூர் தமிழ் சங்க விருது)
மனச் சுவடுகள் - மரு. பரமகுரு
இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவப் புதினங்களில் ஒடுக்கப்பட்டோர் - உ.இராசு
சொற்பொழிவாளர் பாரதியார் - சேதுபதி
(என்.சி.பி.எச். கலை இலக்கியப் பெருமன்ற விருது)
அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர் - இரா. மீனாட்சி, சேதுபதி
அற்புதத் துறவி அடிகளார் - சேதுபதி
சகாதேவர் அருளிய தொடுகுறி சாஸ்திரம்
குறளறம் - அ.சொ.சண்முகனார்
பொருட்குறள் - அ.சொ.சண்முகனார்
இன்பக்குறள் - அ.சொ.சண்முகனார்
உயிரின் நிறங்கள் - அ.சொ.சண்முகனார்
திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள் - பா. சுந்தர்
மார்கழிப் பாவை - கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
மார்கழிப் பூக்கள் - மரு. பரமகுரு
பரமகுரு பாடுகிறேன் - மரு. பரமகுரு