பாரதியாரின் ௧௨௫ பிறந்தநாளும் ஆரோவில் ௪௦ பிறந்த நாளும் ஒன்றிணைந்த ௨௦௦௭ ஆம் ஆண்டிலிருந்து ௨௦௦௮ ஆம் ஆண்டு வரையிலுமான ஓராண்டு காலத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டது ஆரோவில் தமிழ் மரபு மையம்.
அதன் துவக்க விழாவிற்கு திரு ஜெயகாந்தன், பாடகர் கங்கை அமரன் ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர்.
ஆன்றோர்கள் நிறைந்த அவையில் கவிஞர் இரா. மீனாட்சி அவர்கள் எழுதிய "உதய நகரிலிருந்து" நூலை ஜெயகாந்தன் அவர்கள் வெளியிட, ஆரோவில் திபெத்தியன் கலாசார மையத்தைச் சேர்ந்த திருமதி கல்சங் அவர்களும் அவர்தம் இளம் குழந்தையும் பெற்றுக் கொண்டார்கள்.
மறக்க இயலாத இனிமை நிறைந்த அந்தக் காட்சியைத்தான் புகைப்படத்தில் பார்க்கிறீர்கள்! கண்ணன் குழலூத குழந்தையும் ஜெயகாந்தனும் ஒரு நேர்கோட்டில் பார்த்திருக்க கவிஞரும் கல்சங்கும் அன்பு பரிமாறிக் கொள்ளும் நல்ல காட்சி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக